சென்னையில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். எனவே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, மேலும் விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர் குமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன்படி, மணிவண்ணன் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அப்போது, 900 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவரிடமும் சேர்ந்து 2.700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் சந்தை மதிப்பு 27 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க : சென்னைவாசிகளே.. பட்டாசு வெடிக்க என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.