ஆந்திராவிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சிக்கு ரயில் மூலமாக 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து விழுப்புரம் வழியாக குருவாயூர் ரயிலில் திருச்சிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உதவியுடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையம் வந்தபோது பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சாக்கு மூட்டைகளுடன் வெளியே வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் 7 பெரிய பண்டல்கள் மற்றும் 11 சிறிய பண்டல்களில் 40 கிலோ எடையில் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் தேனி உத்தமபாளையத்தை சார்ந்த சரஸ்வதி, ரமேஷ் என்பதும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி பிறகு புதிய பஸ் நிலையம் சென்று பேருந்து மூலமாக தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.
மேலும் கஞ்சா கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.