கோவை : வலிமை திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போலவே திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). இவரும் இவரது பக்கத்து வீட்டு பையனும் (மைனர்- 17 வயது) சரவணம்பட்டி பகுதியில் ராகுல் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதால் சரவணம்பட்டி போலிசாரால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மார்ச் மாதம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படத்தை பார்த்து ஏதேனும் ஒரு குற்றசெயலில் ஈடுபட முடிவெடித்து திருட்டில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 11 இரு சக்கர வாகனங்களை திருடியதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாகவும் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஜீவானந்தத்திற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர்கள் திருடிய 11 வாகனங்களில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள உரிமையாளர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.