கோவை : வலிமை திரைப்படத்தை பார்த்து அதில் வருவது போலவே திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). இவரும் இவரது பக்கத்து வீட்டு பையனும் (மைனர்- 17 வயது) சரவணம்பட்டி பகுதியில் ராகுல் என்பவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதால் சரவணம்பட்டி போலிசாரால் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மார்ச் மாதம் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “வலிமை” திரைப்படத்தை பார்த்து ஏதேனும் ஒரு குற்றசெயலில் ஈடுபட முடிவெடித்து திருட்டில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 11 இரு சக்கர வாகனங்களை திருடியதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாகவும் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஜீவானந்தத்திற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர்கள் திருடிய 11 வாகனங்களில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள உரிமையாளர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.