கன்னியாகுமரி அருகே கடனை திரும்ப கேட்டவரை அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். அரசு பேருந்து ஓட்டுனரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தேவதாஸ் நேற்று மாலை தனது வீட்டின் முன் மீன் வலைகளை பின்னி கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் வந்த சசிக்குமார் தேவதாஸ்-ஐ தகாத வார்த்தைகள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதை கண்ட தேவதாஸ் மனைவி தடுக்க வந்த நிலையில், இரு தரப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கட்டிப்புரண்டு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார், தேவதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தில் வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் மற்றும் தேவதாஸ் குடும்பத்தினர் கட்டிப்புரண்டு தாக்கி கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.