சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கூடியவிரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.
மேலும் படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் தற்போது தி லெஜன்ட் படத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இப்படம் அடுத்த மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது மதுரை அன்புச்செழியனும், ஏஜிஎஸ் நிறுவனமும் இப்படத்தை வாங்க முன் வந்துள்ளனர். ஏனென்றால் இப்படத்தில் ஏகப்பட்ட பிரம்மாண்ட காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் ஆரம்பத்திலிருந்தே இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் அண்ணாச்சி. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டிங்கில் இருந்தது. இதனால் அண்ணாச்சி அடுத்தடுத்து மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.