Categories: தமிழகம்

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் இருவர் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!!

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இரு மாணவிகள் மாயம்… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்!!

திருவாரூர் நகரில் ஏங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் வேலங்குடி மற்றும் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவியர் அங்கு விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆதரவற்றவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சிறப்பு வகுப்புக்கு செல்வதாக சக மாணவிகளிடம் சென்று கூறியுள்ளனர்.

பின்பு விடுதியில் இருந்த மாணவிகள் இவர்கள் இருவரையும் காணாமல் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த தகவலின் பெயரில் பள்ளி தாளாளர் சாந்தி பள்ளி வளாகம் மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிய பிறகு இருவரும் கிடைக்காததால் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விரைந்து சென்ற நகர காவல் நிலைய போலீசார் அவர்கள் தங்கி இருந்த விடுதியை ஆராய்ந்த பொழுது அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாகவும் அதில் எங்களுக்கு இங்கு தங்கி படிக்க விருப்பமில்லை எனவும் எங்களை யாரும் தேட வேண்டாம் எனவும் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் இவர்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் நகரில் உள்ள பிரபல பள்ளியில் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் மாயமானது இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 13 வயதான இரண்டு மாணவிகள் மாயமான திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

22 minutes ago

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

1 hour ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

1 hour ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

2 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

3 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

This website uses cookies.