திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து 81லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று இரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட
பயணிகளுடன் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இரு பயணிகளை தனியாக அழைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி தன்னுடைய உடைமையில் சுமார் 983.50கிராம் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு சுமார் 48 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாகும், இதோ போல் மற்றொரு பயணியை சோதனை செய்த போது, அந்த நபர் பசை வடிவில் 668.600 கிராம் தங்கத்தை மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாயாகும். இரு பயணிகளிடமும் இப்படிப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 81லட்சம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.