Categories: தமிழகம்

நேருக்கு நேர் மோதிய இருமாநில அரசு பேருந்துகள் : கோர விபத்தில் கேரள ஓட்டுநர் பலி.. வெளியே வரமுடியாமல் அலறிய பயணிகள்!!

நேருக்கு நேர் மோதிய இருமாநில அரசு பேருந்துகள் : கோர விபத்தில் கேரள ஓட்டுநர் பலி.. வெளியே வரமுடியாமல் அலறிய பயணிகள்!!

குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு தமிழக அரசு பேருந்து ஒன்று மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லக்கூடிய கேரள அரசு பேருந்து மேம்பாலத்தின் வழியாக வந்துள்ளது. அதிவேகமாக வந்த மேம்பாலத்தின் மேல் வைத்து நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் கேரள பேருந்து ஓட்டுனர் இறந்த நிலையில் பேருந்துகளில் பயணம் செய்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிருக்கு போராடியபடி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும் தமிழக அரசு பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்த நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக மார்த்தாண்டம் மேம்பாலத்தின் பல மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாலத்தின் மேல் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.