ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த காட்பாடி பாலம் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி என எம்பி கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்தது . தற்போது , பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்ற நிலையில் உள்ளது.
பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் மிகவும் சிரமப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு நாளை முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
4ஆம் தேதி முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் செல்லலாம். சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என வேலூர் எம். கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடித்த அதிகாரிகள் , பணிக்காக ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.