ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த காட்பாடி பாலம் சீரமைப்பு பணி நிறைவடைந்த நிலையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி என எம்பி கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்தது . தற்போது , பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகின்ற நிலையில் உள்ளது.
பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் மிகவும் சிரமப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு நாளை முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
4ஆம் தேதி முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் செல்லலாம். சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என வேலூர் எம். கதிர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடித்த அதிகாரிகள் , பணிக்காக ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.