கன்னியாகுமரி : முளகுமூடு பகுதி அருகே இரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், பைக்கை நிறுத்தி விட்டு, கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் போரிஸ். இவர் தனது வீட்டின் பக்க சுவர்களில் விலையுயர்ந்த பூச்செடிகளை தொட்டியில் நட்டு வளர்த்தி வருகிறார். நேற்று முன்தினம் போரிஸ் மனைவியுடன் வெளியூர் சென்று நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த 10 பூச்செடிகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் அந்த செடிகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் பெண்கள் பூச்செடிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.