தமிழகம்

அண்டாவில் குழந்தை.. அலறிய பெற்றோர்.. தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடி அருகே, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அண்டாவில் கவிழ்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் – காஞ்சனாதேவி தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதில் சபீனா பானு என்ற மகள் இருந்தார். இந்த நிலையில், இக்குழந்தை அண்டாவில் நிரம்பியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக, அண்டா தண்ணீரில் குழந்தை தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையின் சத்தம் நீண்ட நேரமாக கேட்காமல் இருந்துள்ளது. எனவே, சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர்.

அப்போது, அண்டா தண்ணீரில் குழந்தை மூழ்கிக் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், அண்டாவில் கிடந்த குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர், குழந்தையை பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தயைக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பெற்றோரை சோகத்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: முட்டை பொரியலில் எலி பேஸ்ட்.. மகளை கொல்ல முயன்ற கொடூரத் தாய்!!

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

14 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

15 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

16 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

17 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

17 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

18 hours ago

This website uses cookies.