புதுச்சேரி குயவர்பாளையத்தில் பெட்ரோல் திருடும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே சின்ன கொசப்பாளையம் பகுதி உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு தினம்தோறும் நள்ளிரவில் மர்ம நபர்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் இரண்டு வாலிபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட முயன்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த பெண்ணை பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து மக்கள் இந்த சிசிடிவி காட்சியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.