uncle mixed poison in Food at Maharashtra Wedding Reception event
தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகளின் காதல் திருமணத்தை ஏற்றதால், வரவேற்பு விருந்தில் விஷம் கலந்த தாய்மாமனை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தனது குடும்பத்தை எதிர்த்து, தான் காதலித்து வந்தவரை திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வீட்டார் சம்மதித்து, அவர்களுக்கு நேற்றைய முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மணமகளின் தாய்மாமாவான மகேஷ் பாடில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த கோபத்தின் உச்சத்தில், வரவேற்பு விருந்து உணவில் மகேஷ் பாடில் விஷம் கலந்துள்ளார்.
அப்போது, மண்டபத்திலிருந்த சிலர், இதைக் கவனித்து உடனடியாக தடுத்துள்ளனர். ஆனால், தனது சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்ததால் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்ததால், விருந்தினர் யாரும் உணவை சாப்பிடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: திருப்பதி கூட்ட நெரிசலில் என் மனைவி எப்படி இறந்தார் தெரியுமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மறுக்கும் உறவினர்கள்!
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, சட்டப் பிரிவு 286 மற்றும் 125 ஆகியவற்றின் கீழ் மகேஷ் பாடில் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய தாய்மாமனைத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.