ராமநாதபுரம் அருகே கீழக்கரை டீ கடைக்குள் புகுந்த சொகுசு கார் மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் நாராயணன் சாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் மது போதையில் இருந்த ஒருவர் காரை இயக்கியதாகவும், கட்டுபாட்டை இழந்து கார் டீக்கடைக்குள் அதிவேகமாக உள்ளே சென்று மோதியதில், தெற்கு வேளானுர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி என்ற 70 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கீழக்கரை லட்சுமிபுரத்தை சார்ந்த கோவிந்தன் என்பவர் சேலத்தில் ஏஜென்சி நடத்தி வருகிறார். அவருடைய தம்பி மகளின் காது குத்துக்காக கீழக்கரை வந்துள்ளார். ஊருக்கு செல்லும் பொழுது புதிய பேருந்து நிலையம் அருகில் நிறுத்திவிட்டு வெளியே சென்றதாகவும், அவரோடு பயணித்த நபர் காரை ஓட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழக்கரை காவல்நிலைய காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும், டீக்கடைக்குள் புகுந்த காரை ஜேசிபி உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. இறந்தவர் உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.