தாராபுரம் : திமுகவிற்கு எதிர்ப்பு காட்டி பாஜகவினர் தாராபுரம் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். பாசன சங்க தேர்தல் விவகாரம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாசன சங்கத் தேர்தலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் கோட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் உதவியுடன் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பாஜகவினர் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
உப்பாறு அணை. பி.ஏ.பி, அமராவதி அணை உள்ளிட்ட தாராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட 31 பாசன சங்க தேர்தலில் 31 பாசன சங்க தலைவர்களும் 136 ஆட்சி மண்டல குழு உறுப்பினர்களுக்கு136 ஆட்சி மனற் குழு உறுப்பினர்களான தேர்தல் இன்று 17 ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த கடந்த 8ஆம் தேதி வேட்புமனு இறுதி பரீட்சை நிலை அன்று தி.மு.க. வை சார்ந்தவர்கள் 136,பேர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் திமுகவினர் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதாக கோட்டாட்சியர் அறிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிலையில் பாஜகவினர் பாசன சங்க தேர்தலில் போட்டியிட்ட அதிமுக- பாஜக- மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் ஒரே இடத்தில் கூட தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனக்கூறி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா சாலை புதிய பேருந்து நிலையம் ஐந்து சாலை சந்திப்பு தாலுக்கா அலுவலகம் எதிரே சின்னக்கடை வீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் அடித்து பாஜகவினர் திமுக அமைச்சர் கயல்விழி மற்றும் கோட்டாட்சியர் குமரேசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்து உள்ளது தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினர் அடித்த போஸ்டரில் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன:
கண்டிக்கிறோம்… தி.மு.க. ஆட்சியில் அராஜகம், தேர்தலில் நின்று மக்களை சந்திக்க வக்கற்ற தி.மு.க.வை கண்டிக்கிறோம். தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர் போல் செயல்படும் தாராபுரம் சார் ஆட்சியர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்… உள்ளாட்சி, பாசன சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தி.மு.க வைத்தவிர யாரும் வெற்றி பெறக்கூடாது என சபதம் ஏற்று இருக்கும் அமைச்சர் கயல்விழி அவர்களின் கணவர் செல்வராஜ் அவர்களும் தாராபுரம் சார் ஆட்சியரும் இணைந்து நடத்தும் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.