கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம், மலைச்சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள அன்னி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கட்டுமான பணிகள் நிறைவு பெறாத ஒரு கட்டிடம் அப்படியே சரிந்து விழுந்தது. இதில் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என செய்திகள் கூறுகின்றன. எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் காண்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.