திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6 1/2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நெடு வரம் பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (70). இவரது மனைவி மகேஸ்வரி (68). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். விஜயன் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, திறந்திருந்த வீட்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து மகேஸ்வரி கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி பீரோவில் இருந்த நகைகளை எடுக்கச் சொல்லியுள்ளனர்.
இதைப் பார்த்த கணவர் விஜயனை மூன்று நபர்கள் தலையில் கட்டையால் தாக்கி விட்டு, தாலி சரடு, இரண்டு நெக்லஸ் உள்ளிட்ட 6/12 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பீரோவில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்தசோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட விஜயனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கூலி தொழிலாளியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.