Categories: தமிழகம்

மதுரை, கோவை மெட்ரோ பற்றி வாயை திறக்காத மத்திய அரசு.. தமிழக மக்களுக்கு அநீதி : எம்பி பரபர குற்றச்சாட்டு!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில் மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது, சாலை சேதம் காரணமாக மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக வேண்டும், மதுரை மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை 91 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட 34 சாலைகளை போர்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் 127 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்க மாநில அரசுக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை அனுப்பி வைத்துள்ளது, மேலமடை, கோரிப்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் பாலப்பணிகளுக்காக மாற்று சாலைகள் அமைக்கவில்லை, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், மதுரையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்,

மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சாலைகள் சேதமடைந்து உள்ளதால் மதுரை மாநகர் பகுதிக்குள் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது, சாலை தொடர்பாக புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்ககூடிய தனி புகார் எண் வெளியீட வேண்டும், மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

நயவஞ்சகத்தின் முழு இலக்கணத்தை மோடி அரசு எழுதி கொண்டு இருக்கிறது, சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 23,000 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் மாநில அரசின் திட்டம் என கைகழுவி உள்ளது, சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் குறித்து ஒன்றிய அரசு பேச மறுக்கிறது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் எம்ய்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட பதிலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எந்தவொரு தகவலுமில்லை, மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை திட்டத்தில் எத்தனை முறை டெக்னிக்கல் பிரச்சினை வரும் என தெரியவில்லை,

திட்டம் அறிவிக்கப்பட்டு 6 வருடங்கள் ஆகியும் டெண்டர் விடுவதில் சிக்கல் உள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தொடர்ச்சியாக அநீதிகளை இழைத்து வருகிறது.

தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு 500 கோடி, 1000 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது, ஆனால் பின்ங் புத்தகத்தில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக மக்களுக்கு அநீதி இழக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

55 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

57 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

1 hour ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.