Categories: தமிழகம்

‘திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர்’: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்றும் திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார்.

மேலும் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,


மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆழ்கடல் மீன்பிடியை உக்குவிக்கும் வகையில் படகு வாங்கும் மீனவர்களுக்கு 60% மானியம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் கடல் பாசி எடுக்க 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதேபோல் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தை ரூ.15.65 கோடி நிதி ஒதுக்கி நவீனபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியை முனேற்ற பாதையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், திராவிட மாடல் என சொல்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்றும் திராவிட மாடல் என கூறி ஆன்மீகம் மண்னை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் என்றும் திராவிட மாடல் என கூறிக்கொண்டு கொடுத்த வாக்குறிதியை மறைக்க பார்க்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சியாளர்களுக்கு தகுந்தார் போல ஆளுநர் செயல்பட முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.