அதிமுகவை சமாதானம் செய்யும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்? கோவையில் நடந்த திடீர் ட்விஸ்ட்!!
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த காரணத்தால், ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக – பாஜக கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, இறுதியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனி வரும் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக அதிமுக தலைமை அறிவித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த அதிமுக விலகியதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக – கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளித்தார். இந்த விளக்கங்களை பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் , அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் . உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர், அதிமுக எம்எல்ஏக்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின் பாஜக தனித்து போட்டியிட முடியுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மேலிடத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்து நினைவுகூரத்தக்கது.
இந்த சந்திப்பை அடுத்து, நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ் 948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். மேலும், சிட்பி MSME வங்கியின் புதிய கிளையையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
This website uses cookies.