Categories: தமிழகம்

மத்திய பட்ஜெட் வேளாண்மையை இரட்டிக்கும் பட்ஜெட்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு..!!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்தான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் . சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

இந்த பட்ஜெட் அடுத்த 25 வருடங்களுக்கு நாட்டிக்கு தேவையானதை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விமானநிலையம், துறைமுகம், நீர்வழிச்சாலை உட்பட போக்குவரத்திற்கான 7 கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருப்பாதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் நாமக்கல் முசிறி 4 வழி சாலை அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ரயில்வேயில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும், சிறு குறு தொழில்களின் பொருட்களை கொண்டு செல்ல ஓன் ஸ்டேசன் ஓன் புராடக்ட் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பட்ஜெட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும் வேளாண்மையை இரட்டிக்கும் விதமாக இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்த அவர் தொழில் முனைவோர்களும் வல்லுநர்களும் கூட இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதாக தெரிவித்தார். கோதாவரி பொன்னாறு காவேரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு பாசன வசதி விரிவாக்கம் செய்யபடும் எனவும் இதனால் மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தபடுவதாக தெரிவித்தார்.

கொரொனாவால் கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பி.எம் இ வித்யா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது எனவும் 200 சேனல்கள் மூலம் தரமான கல்வி பயிற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் பல்கலைகழகம் , டெலி மெடிசன்ஸ் , அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்றவைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பி.எம். கரிசக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதில் 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் அனைத்து மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

13 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

14 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

14 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

15 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

16 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

16 hours ago

This website uses cookies.