Categories: தமிழகம்

மத்திய பட்ஜெட் வேளாண்மையை இரட்டிக்கும் பட்ஜெட்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு..!!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்தான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் . சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்தற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

இந்த பட்ஜெட் அடுத்த 25 வருடங்களுக்கு நாட்டிக்கு தேவையானதை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விமானநிலையம், துறைமுகம், நீர்வழிச்சாலை உட்பட போக்குவரத்திற்கான 7 கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருப்பாதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் நாமக்கல் முசிறி 4 வழி சாலை அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ரயில்வேயில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும், சிறு குறு தொழில்களின் பொருட்களை கொண்டு செல்ல ஓன் ஸ்டேசன் ஓன் புராடக்ட் என்பதை அடிப்படையாக கொண்டு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பட்ஜெட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும் வேளாண்மையை இரட்டிக்கும் விதமாக இந்த பட்ஜெட் உள்ளதாக தெரிவித்த அவர் தொழில் முனைவோர்களும் வல்லுநர்களும் கூட இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதாக தெரிவித்தார். கோதாவரி பொன்னாறு காவேரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு பாசன வசதி விரிவாக்கம் செய்யபடும் எனவும் இதனால் மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தபடுவதாக தெரிவித்தார்.

கொரொனாவால் கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பி.எம் இ வித்யா என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது எனவும் 200 சேனல்கள் மூலம் தரமான கல்வி பயிற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் பல்கலைகழகம் , டெலி மெடிசன்ஸ் , அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்றவைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பி.எம். கரிசக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதில் 7 முக்கிய துறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் அனைத்து மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

12 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

14 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.