திண்டுக்கல் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், வரிப்பணம் பல லட்ச ரூபாயை ஒப்பந்ததாரருக்காக அதிகாரிகள் வீணடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்டது பித்தளைப்பட்டி ஊராட்சி ராயர்பட்டி. இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி மல்லையபுரம் வழியாக சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் செய்யும் குடகனாறு, இப்பகுதி வழியாக கரூர் அமராவதி ஆற்றுக்குச் சென்று இணைகிறது.
கடந்த சில வருடங்களாக போதிய மழையின்மை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிலர்களின் பிரச்சனையால் ஆற்றில் தண்ணீர் வராமல் இருந்தது. கடந்த வருடம் அனுமந்தராயன் கோட்டை, பித்தளைப்பட்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது மழைக்காலம் துவங்கினாலும் தண்ணீர் மலையில் இருந்து வரும் பொழுதும் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆற்றை ஒட்டி உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் தற்போது விவசாயத்தை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடகனாறு ஆற்று படுகையில் ராயபுர் பட்டி அருகே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையானது தரமற்ற முறையில் சிமெண்ட் அதிக அளவு போடாமலும், வாய்க்காலில் உள்ள மண்ணையும் அள்ளி தடுப்பணை கட்டி வருவதாகவும், இந்த தடுப்பணை வரும் மழைக்காலத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்படும் என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது :- கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதன் அருகிலேயே தடுப்பணை கட்டினார்கள். அந்த தடுப்பணை ஒரே மழையில் அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல் தற்போது கட்டப்படும் தடுப்பணையும் வரும் மழைக்காலத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணம் வீண் செய்யப்படும். ஒப்பந்தக்காரரிடமும், அரசு அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும், எந்த ஒரு பயனும் இல்லை. தரம் இல்லாத தடுப்பணையை தற்போது கட்டி வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியில் ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் கூட்டணி சேர்ந்து தரமற்ற தடுப்பணை கட்டி வருகின்றனர். இந்த தடுப்பணை யாருக்கும் பிரயோஜனம் கிடையாது, என்று கூறி அருகில் உள்ள விவசாய பொதுமக்கள் தடுப்பணை செய்து வரும் பணிகளை நிறுத்தினர்.
மேலும் தரமற்ற முறையில் உள்ள சிமெண்ட் பயன்படுத்தி வருவதாகவும், கண்துடைப்புக்காக தற்போது இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தனது சொந்த தொகுதியில் நேரடியாக பார்வையிட்டு இதுபோன்ற முறைகேடுகள் செய்யும் ஒப்பந்தக்காரர் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றுப் படுகையில் கட்டப்படும் தடுப்பணைகள் தரம் உள்ளதாகவும், காலம் காலத்திற்கு இருக்கும் அளவிற்கு கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.