தூத்துக்குடி ; தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நகர் முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
மழைகாலங்களில் அதிக அளவில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியும் ஒன்று. இந்தத் பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, கால்வாய்களை மூடும் பொழுது கம்பிகள் ஏதும் இல்லாமல் கான்கிரீட் போடப்படுவதாகவும், கால்வாய்க்கு மேல் மூடி போடாமல் பணிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு கம்பிகளில்லாமல் போடும் பொழுது, அது உடனடியாக உடைந்து விடுவதுடன், பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இதை போல் நகரின் பல பகுதிகளிலும் இதுபோன்ற தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.