Categories: தமிழகம்

தோண்ட தோண்ட சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள்.. கோடி கோடியாக சம்பாதித்த ‘வக்கிர ராஜா’ : அதிர வைத்த சம்பவம்!!

பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்த நபர் ராஜா. இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகனாவார். இவர் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர்.

விவசாயியான ராஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் ஓராண்டு வேலை பார்த்து வந்தார். இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பலவிதமான வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து அதன்மூலம் பல கோடி சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் மத்திய உளவுப்பிரிவுக்கு தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு ராஜா பதிவேற்றம் செய்துள்ள பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் குறித்த தகவல்களை சிபிஐக்கு மத்திய உளவு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராஜாவின் இணையதள முகவரி மற்றும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வெப்சைட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்தனர்.

இதில் ராஜா, பெண் குழந்தைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினர். இதைதொடர்ந்து சுப்பிரமணியன் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்பேரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் உள்ள சுப்பிரமணியன் வீட்டுக்கு நேற்று காலை 8 மணிக்கு 4 பேர் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் காரில் வந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் மற்றும் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் உபகரணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை பிற்பகல் வரை நடைபெற்றது.

லண்டனுக்கு சென்று வந்த ராஜா, விவசாயத்தை கைவிட்டு விட்டு திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் வெளிநாட்டில் வேலை செய்தபோது ஏற்பட்ட பெரும் தொடர்பை பயன்படுத்தி கொண்டு திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்தவாறே இளம்சிறார்களின் புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ராஜா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சோதனை குறித்து பேசிய சிபிஐ அதிகாரிகள், இளம் சிறார்களின் ஆபாச படங்கள், வீடியோக்களை மொபைல் செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து ராஜா பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

இந்த வீடியோக்கள் பதிவேற்றத்தில் ராஜாவுக்கு உடந்தையாக இருந்தது யார், வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இதற்கு ஏஜென்டாக இருந்தது யார் என்ற பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

4 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

5 hours ago

This website uses cookies.