அரசுத் துறைகளில் ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தகுதியானவை தானா..? என்று ஆய்வு செய்தால், பெரும் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று தமிழ்நாடு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் செயலாளர் கே.சி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள், மாநில தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பொதுப்பணித் துறை, மாநகராட்சிகள், மாநகராட்சிகள், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலன்களை கருத்தில் வைத்து ஒப்பந்தங்களை ஒதுக்குவதில் நியாயமான செயல்முறையை கையாள வேண்டும்.
மேலும், தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கும் போது, சாலையில் விரிசல்கள், தரமில்லாத பாலங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, மிசோரம் மாநிலம் சாய்ராங்கில் நேற்று நடந்த ரயில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே, வீடு மற்றும் பாலம் போன்ற முக்கிய கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுபவங்கள், சாதனைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம், தரமுள்ள நிறுவனங்களை கண்டறிந்து, ஒப்பந்தங்களை ஒதுக்குவதன் மூலம், இதுபோன்ற பேரிடர்களை தவிர்க்க முடியும்.
குறிப்பாக, ஒப்பந்தங்களை ஒதுக்குவதில், தகுதிகள் மற்றும் தொழில்துறை நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களுக்கு எந்த விதமான தயவும் காட்டக்கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறைகள் ஒப்பந்த ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்களைச் சரி செய்யவும், விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரத்தில் குறைபாடுகள் உள்ள நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மாநிலமும், நாடும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வேளையில், ஒப்பந்த செயல்முறைகளில் சமரசம் இல்லாமல்,மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம், எனக் கூறினார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.