Categories: தமிழகம்

நெஞ்சுவலி நாடகம்.. சிறையில் விஜயராகவன் : V3 Online Tv நிறுவனர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சுவலி நாடகம்.. சிறையில் விஜயராகவன் : V3 Online Tv நிறுவனர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Myv3 ads நிறுவனம் மீது கோவை மாநகர காவல் துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் குறித்து போலீசார் விசாரித்த பொழுது அந்த நிறுவனத்திற்கு மூலிகை பொருட்கள், சித்த மாத்திரைகள் போன்றவற்றை விஜயராகவன் என்பவர் வழங்கி வருவது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து விஜயராகவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஏற்கனவே “v3 online TV” என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் அதை மூடிவிட்டு, சித்தா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து “myv3″ads நிறுவனத்திற்கு கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

“Myv3ads” நிறுவனத்துக்கு சித்தத மருத்துவ பொருட்கள் அனுப்புவது தொடர்பாக விஜயராகவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பு படித்து இருப்பதாக போலிச் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு சித்த மருந்து பொருட்களை தயாரித்து வருவதும் தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் போலி சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், அவரை நேற்று முன் தினம் இரவு மதுரையில் போலீசார் கைது செய்தனர்.

அப்பொழுது நெஞ்சுவலி என்று சொன்னதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர்.

கோவையில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறியதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனையில் அவரது உடல் நலம் நன்றாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இரவு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விஜயராகவன் , தனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் , சர்க்கரை நோய் மற்றும் வெரிகோஸ் பிரச்சினைகள் இருப்பதாகவும் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து விஜயராகவனை மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்து வந்த சிறைதுறை அதிகாரிகள் அங்கு அனுமதித்தனர்.
விஜயராகவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.