Categories: தமிழகம்

மருத்துவத்துறை காலி பணியிடங்கள் நவம்பர் 15க்குள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

திருவாரூர் : மருத்துவத்துறையில் உள்ள 4308 காலி பணியிடங்கள் நவம்பர் 15 க்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கான சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, உணர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவு, ஆதிச்சபுரம் கிராமத்தில் துணை செவிலியர்கள் மற்றும் செவிலியர் குடியிருப்பு, செருமங்கலம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம், வெங்கத்தான்குடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம், உபயவேதாந்தபுரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார புறநோயாளிகள் பிரிவு ஆகிய கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது :- அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். அந்த வகையில் ஏற்கனவே 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனங்கள் செய்யப்பட்ட பொழுது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடந்த நேர்காணலில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு 20 சிறப்பு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு பணியில் அமர்த்தபட்டார்கள்.

பணியமர்த்தப்பட்ட 7,448 நபர்களில் 50 சதவீதம் நபர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பணியிடங்கள் நிரப்பப்படும் பொழுது கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்த முடியாது.

தமிழகத்தில் மருத்துவத் துறையில் 1021 மருத்துவர்கள் உட்பட மொத்தம் உள்ள 4308 காலியிடங்களின் பட்டியல் மருத்துவ தேர்வாணயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.சென்ற நிதிநிலை அறிக்கையிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது, 237 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் இறுதிக்குள் அல்லது நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த 4308 பணியிடங்களும் எந்த மருத்துவமனைகளில் காலிபிடங்கள் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல் நிரப்பப்படும், எனக் கூறினார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது குறிப்பாக இளம் பெண்கள் பயன்படுத்துவது சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் சாணி பவுடரை நாம் தடை செய்தாலும் வெளி மாநிலங்களில் அது உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, அவர்களுக்கும் இதன் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி உற்பத்தி தடை செய்ய வேண்டும்.இது அகில இந்திய அளவிலான பிரச்சினையாக இருப்பதால் இது குறித்து ஒன்றிய அரசு உடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.சாணி பவுடர் என்பது எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகவும் இருக்கிறது.

அதேபோன்று, எலி பேஸ்ட் விற்பனையை கடைகளில் விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கக் கூடாது. மறைத்து வைத்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறோம். மேலும், எலி பேஸ்டை தனியாக வந்து வாங்குவோர்களுக்கு கொடுக்கக் கூடாது. தங்களுடன் ஒரு ஆளை அழைத்து வருபவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

8 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

8 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.