தமிழகம்

மாடு கூட தாய்மொழியில்தான் கத்தும்.. வடிவேலு பரபரப்பு பேச்சு!

மும்மொழிக் கொள்கை பிரச்னைக்கு இடையே, காக்கா, கிளி, மாடு எல்லாம் அதன் தாய்மொழியில்தான் கத்துகின்றன என நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

சென்னை: சென்னையின் யானைக்கவுனியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, திமுக சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம் மற்றும் நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய வடிவேலு, “தமிழ்நாடு முதலமைச்சரால் பயனடையாத மக்களே கிடையாது. விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ வலிகள் வருகிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் சிக்சர்கள் அடிப்பது போல முதலமைச்சர் அடித்து வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இல்லை என்றால், தமிழே இன்று இருந்திருக்காது. காக்கா, கிளி, மாடு எல்லாம் அதனுடைய தாய்மொழியில்தான் கத்துகின்றன. அவற்றையெல்லாம் மாறி மாறி கத்தச் சொன்னால் கத்துமா? அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ, கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.

நாட்டிற்கு ஏதேதோ அடையாளமாக இருக்கிறது, எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ்தான் அடையாளம். 5,000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி, முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வையில் உள்ளது. எங்கள் தமிழ்மொழி உலகுக்கு எல்லாம் கற்றுத் தரும் மொழி. ஆங்கிலம் வெறும் கனெக்டட் மொழி மட்டும்தான்.

இதையும் படிங்க: இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!

சின்ன சின்ன வார்த்தைக்கு அர்த்தமுள்ள தங்கமான மொழி தமிழ் மொழி. நான் அரசியல் பேசவில்லை, என்னுடைய மொழியைப் பற்றிதான் பேசுகிறேன். இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழரின் மேடை, தமிழ்நாட்டின் மேடை. முதலமைச்சர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் எந்த பாதிப்பும் வராது.

முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்கும் மூத்த தகப்பன். முதலமைச்சருக்கு தூக்கமே கிடையாது. இரண்டு மணிநேரங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தூங்குகிறார், எந்த நேரமும் பணியில்தான் உள்ளார்” எனத் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டில் 200 சீட்டுக்கு மேல் பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும், மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.