தமிழகம்

என் உயிர் இருக்கும் வரை… அண்ணாமலை குறித்து வைகோ பகீர்!!

சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பேச்சு ஆரம்பித்த அவர் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தி வருகின்றார்.

மற்ற மாநில முதல்வர்களுக்குப் போதுமான ஒர் எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நிற்கின்றார். பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார்.

இதையும் படியுங்க: சினிமா காட்சியை மிஞ்சிய விபத்து… 2 முறை கவிழ்ந்த வேன்.. பதற வைத்த வீடியோ!!

இது இந்தியாவில் நடைமுறையில் சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவை சர்வாதிகார நாட்டாக மாற்றவே அவர் முனைந்து கண்டு கொண்டிருக்கிறார்.

திமுகவின் போராட்டத்தினாலேயே விவசாயிகள், நெசவாளர்கள் போன்ற மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அடுத்து, இந்த நிலைமை தொடரும். 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மூச்சுத் திணறிய மோடிக்கு 250 மட்டுமே கிடைத்தது. எதிர்காலத்தில் இந்த 250 கூட அவருக்கு கிடைக்காது. 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிடும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப்போவதில்லை என்று கூறியதைப் பற்றி வைகோ பதிலளிக்கையில், “நான் இருக்கும்போது திமுக ஆட்சியை அகற்ற விட மாட்டேன். பாஜக இங்கு ஒரு அடி வைக்க முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் மிகவும் ரசிக்கக்கூடியது” என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

23 minutes ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

30 minutes ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

1 hour ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

2 hours ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

2 hours ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

This website uses cookies.