கோவை : வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை பகுதியில் அரசு பள்ளியில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குலசேகரன் (50). இவர் வால்பாறை பகுதி காடம்பாறையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தற்காலிக ஊழியராக 29 வயது பெண் வேலை பணி செய்து வந்துள்ளார்.
இந்த பெண் ஊழியரிடம் தலைமை ஆசிரியர் குலசேகரன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்து, காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காடம்பாறை காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் குலசேகரனை விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.