தமிழகம்

நான் செத்தா திருமாவளவன் தான் காரணம்.. வணக்கம்டா மாப்ள பிரபலத்துக்கு நடந்தது என்ன?

வணக்கம்டா மாப்ள தேனில இருந்து பிரபலம் அருண் என்பவரை விசிகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தேனி: ‘வணக்கம்டா மாப்ள தேனில இருந்து” எனப் பேசத் தொடங்கும் தேனியைச் சேர்ந்த அருண் என்பவர், டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வீடியோ வெளியிட்டு பிரபலமாகவே இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் பேசிய அருண், “பழனி மலைக் கோயிலுக்குச் சென்றால் நான் வேண்டுதலுக்காக வரவில்லை, சிலையை பார்க்க வந்தேன், விநாயகர் சிலை இப்படி இருக்கிறது, முருகன் சிலை அப்படி இருக்கிறது எனப் பேசுகிறீர்கள். சர்ச்சுக்குச் சென்றால் ஏன் சுவற்றைப் பார்த்துப் பேசுகிறீர்கள் என கேட்பீர்களா?

உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் இருந்தால், ஓட்டு கேட்க போகும் போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடுங்கள், சாமி கும்பிடுபவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பேசுவீர்களா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளாவனைக் கேட்டு இருந்தார். முன்னதாக, திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.

இதனையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசியதாக, ‘வணக்கம் டா மாப்ள’ தேனி அருணை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் மிரட்டியதாக வீடியோ ஒன்றையும் அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதன்படி, தற்போது சபரிமலைக்கு அருண் மாலை அணிந்திருக்கும் நிலையில், அவர் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்ற விசிக துண்டை அணிந்த சிலர், ஆபாசமாகப் பேசியதாகவும், அவரை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தன்னை தாக்கியதாக அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

மேலும், போலீசில் இது குறித்து அவர் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில், தன்னை விசிகவினர் தாக்கியதில் நெஞ்சு வலி உள்பட உடலில் பல பகுதிகளில் வலி இருப்பதாகவும், ஒருவேளை தான் இறந்துவிட்டால் அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் தான் காரணம் எனவும், இதற்கு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

18 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

18 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

18 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

19 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

20 hours ago

This website uses cookies.