தமிழகம்

திமுக அனுதாபிக்கே அப்படினா.. நிர்வாகிக்கு? கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்!

அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சருடைய பதில் உணமையிலேயே திருப்திகரமாக இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக, தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, நிர்வாகி அல்ல, ஆனால் அவர் திமுக அனுதாபி என்பதை முதலமைச்சரே ஒத்துக்கொள்கிறார்.

அதில் எங்கள் கேள்வி என்னவென்றால், ஒரு திமுக அனுதாபி இத்தனை சக்தி வாய்ந்த துணை முதலமைச்சர், திமுக அமைச்சருடன் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமென்றால், ஒருவேளை குற்றவாளி சக்தி வாய்ந்த கட்சியினுடைய நிர்வாகியாக இருந்திருந்தால், இந்த வழக்கில் எப்படி நீதி கிடைத்திருக்கும்?

முதலமைச்சருடைய பதில் உணமையிலேயே திருப்திகரமாக இல்லை. பெண்களின் பாதுகாப்புக்காக, ஒவ்வொருநாளும் படும் துயரங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தோ, முன்னேற்பாடுகள் குறித்தோ முதலமைச்சர் குறிப்பிடவில்லை.

முழுக்க முழுக்க ஆளுநர் மீதும், மத்திய அரசின் மீதும் சம்பந்தமில்லாமல் கல்வித் துறையைப் பற்றியும், பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் இங்கு குறிப்பிடுவது அவசியம் இல்லாதது. அவரது பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. போலீசை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர், அரசியல் கட்சிகள் நியாயமாக விசாரணை நடைபெறவில்லை என்றால், ‘ஆதாரங்களை நீங்கள் கொடுங்கள்’ எனக் கூறினால் என்ன அர்த்தம்?

இதையும் படிங்க: பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. காவல் நிலையம் அருகே நடந்த கோரம்!

காவல்துறையை பேசாமல் எதிர்கட்சிகளிடமே கொடுத்துவிடலாமே. யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் இப்போது தான் சிறிது சிறிதாக தைரியமாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் முடக்குவது போன்று இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திமுக உறுப்பினர் அல்ல எனவும், அவர் திமுக அனுதாபி எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.