தமிழகம்

சனாதனத்திற்கு ஆபத்து வரும்போது.. விஜய் சொன்னது வேதனையே.. வானதி சீனிவாசன் கூறுவது என்ன?

சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும்போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: உலகமெங்கும் உள்ள தமிழர்களால், நேற்று தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்தது.

அது மத அடிப்படைவாதியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. ஆனால், மாநில அரசு இன்னும் சிலிண்டர் வெடி விபத்து எனக் கூறுகிறது. கோவை மக்களைக் காப்பாற்றியவர் சங்கமேஸ்வரர் தான். 20 ஆண்டுகளாக நின்றிருந்த தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், சமீப காலமாகத்தான் நடைபெற்று வருகிறது.

சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு நான் முன் வைத்திருந்தேன். ஆனால், கோரிக்கை வைத்து ஒரு வருடம் ஆகியும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நாடு, சனாதன தர்மத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஊறியது.

சமீப காலமாக சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக, இந்துக் கோயில்களுக்கு தொந்தரவு அளிப்பது, இந்துக்களை இழிவு செய்வது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் சிறுபான்மை அரசியல் செய்து வருகின்றனர். திமுகவினர் மற்றும் அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சியினர், ஒரு மலையின் பெயரை மாற்றவே உறுதுணையாக இருப்பது வெட்கக்கேடான ஒன்று.

இதையும் படிங்க: அப்பா போல் விஜய் அண்ணா செய்தால் கூட்டணி.. விஜய பிரபாகரன் செக்!

சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும்போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இந்துக் கோயில்கள் பிரச்னை பற்றி மற்ற எந்த கட்சிகளும் வாய் திறப்பதில்லை. யாருமே பேசாதபோது பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் ஆகியவை போராடும் கட்டாயம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தர்.

பின்னர், தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “தைப்பூசத்திற்கு வாழ்த்து சொல்லக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு நாங்கள் என்ன கருத்து சொல்வது? அவருடைய தேர்தல் வெற்றிக்காக அவர்கள் சந்திக்கிறார்கள்” என்றார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.