வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம், சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய விவாதத்தின்போது வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழும் நாடு இந்தியா.
பல்வேறு வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும், அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வக்ஃப் வாரிய சட்டய்ஜ் திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கிறது. அதனைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக முதலமைச்சர் கூறுகிறார். ஒவ்வொன்றிற்கும் பதில் பேச எனக்கு நேரம் கொடுத்தால், பதில் பேச ஏதுவாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை கட்டாயம் பின்பற்றி ஆக வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் நாட்டு குடிமக்களை சமமாகப் பாவிக்கிறது. வக்ஃப் வாரியச் சட்டத்தைப் பொறுத்தவரை, திருநெல்வேலியில் கடந்த வாரம் நடைபெற்ற படுகொலையைக்கூட இங்கு விவாதித்தோம். அதுவும் இதே வக்ஃப் வாரிய பிரச்னைகளால் நடந்தது தான்”என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “வானதி சீனிவாசன் சட்டம் தெரிந்தவர். மதத்தின் அடையாளமாக கருதப்படும் வாரியத்தில் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவரை புகுத்துவது எந்த வகையில் நியாயம்? வெளி மதத்தைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைப்பது மத அரசியலைத் தூண்டுவதுபோல இருக்கும்” எனக் கூறினார்.
எனவே, மீண்டும் எழுந்த வானதி சீனிவாசன், “வக்ஃப் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் பற்றிய விவாதம் இது என்றால், இங்கு எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு கருத்திற்கும் என்னால் பதிலளிக்க முடியும். வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன” என்றார்.
இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்து பேசுகையில், “நாடு முழுவதும் பெயரளவிற்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஆட்சேபனைகளுக்கு பதில் அளிக்காமல் தேவைப்படக்கூடியவர்கள் அளித்த பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர்” எனக் கூறினார்.
உடனே, ”நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி இந்த சட்டப்பேரவை நடத்துவதற்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். எனவே, இந்த தீர்மானத்தைக் கொண்டு வருகிறீர்கள். அதேபோல, மத்திய அரசும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது” என வானதி சீனிவாசன் பேசினார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு எதிராக தவெக? டெல்லியால் மாறும் ரூட்!
அப்போது எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், “நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், இந்த சட்டத் திருத்தத்தின் மீது வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச சபாநாயகர் அனுமதி கொடுங்கள். இதுதான் ஜனநாயகம்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை பாஜக ஏற்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றும் கூறி வானதி சீனிவாசன் உள்பட பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரத்திற்கு கடும் விவாதம் எழுந்தது.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.