உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், வட்டாச்சியரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன். இவர் பட்டா மாறுதலுக்கான வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு, நான் வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் பணியையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பம் இட வலியுறுத்தி சீமானுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நவநீதன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தொலைபேசியில் பேசிய நிலையில், அவரிடம் விஏஓ -வை கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.