நாங்க வைச்ச சிலை… அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிய வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய விசிக : இரு கட்சியினரிடையே மோதலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 6:33 pm
Vck Bkp Clash - Updatenews360
Quick Share

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினர், தடுத்து நிறுத்திய விசிகவினரால் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை அப்பகுதி விசிகவினர் தடுத்து நிறுத்தி சிலையை பூட்டிவிட்டு பா.ஜ.கவினரை திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.
இதனால் இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.

காந்தி நகர் பகுதியை சேர்ந்த இருவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளதால் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளனர். இது பொது சிலை அல்ல நாங்கள் வைத்த சிலை என விசிக தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அம்பேத்கரின் வரலாறு பற்றி தெரியாமல் உள்ளனர் என பாஜகவினர் விசிகவினர் மாற்றி மாற்றி குறை சொல்லி விமர்சித்து வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிப்பதில் பாஜக – விசிகவினர் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 685

0

0