தமிழகம்

அதிமுகவுக்கு அச்சாரம் போடுகிறதா விசிக? ஸ்டாலின் போட்ட முடிச்சு!

விசிக வேறு கூட்டணியை உருவாக்கத் தேவை இல்லை என மீண்டும் கூட்டணி மாறுதல் தொடர்பான பேச்சுக்கு திருமாவளவன் உறுதி அளித்து உள்ளார்.

சென்னை: “திருமாவளவன் எந்தப் பக்கம் போவார் என்று தமிழகமே காத்திருக்கிறது. அவர் நல்லவர்களோடு இருப்பார், திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்” என, நேற்று (நவ.17) சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசி இருந்தார்.

இவ்வாறு இவர் பேசிய மேடையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே அதிமுக உடனான விசிகவின் இணக்கமான போக்கு திமுகவுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியதாக தகவல்கள் கசிந்து வந்தன.

எனவே, இதனைப் போக்க விசிக தலைவர் திருமாவளவன், அந்த மேடையிலேயே, ““மக்களோடு மட்டும் தான் விசிக நிற்கும். இதுதான் நான் இன்பதுரைக்கும் அளிக்கும் பதில். மக்கள் பிரச்னை என்றால், மக்களுக்காக கட்சி அடையாளங்களை க்கடந்து விசிக நிற்கும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்காக போராடுவது வேறு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன் சார்ந்தது. எனவே, காலச் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுவும் முடிச்சை அவிழ்காமலே, மீண்டும் ஒரு முடிச்சாக அமைய, நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசிக வேறு கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விசிக, இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்கத் தேவையும் இல்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கங்குவா பட விமர்சனம் திட்டமிட்ட சதி ..ஆவேசம் ஆன ஜோதிகா..!

இவ்வாறு தான் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிலே தொடர்வதாக திருமாவளவன் மீண்டும் உறுதி அளித்து உள்ளார். இந்த நிலையில், திமுகவின் ஐடி விங் எக்ஸ் தளப் பக்கத்தில், “அருமைச் சகோதரர் திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளாவன் அவர்களும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது தொடர்பான வீடியோ வெளியிட்டது மற்றும் தவெக தலைவர் விஜய், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அழைப்பு விடுத்தது என இன்னும் விசிக கூட்டணி வலையிலே கிடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.