தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமியின் கணவரை சரமாரியாக தாக்கியதில் அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது
தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி.வீரலட்சுமி. இவரது கணவர் கணேசன் (48). இவர்கள் வேப்பம்பட்டு, பெரியார் நகர், எம்ஆர்கே தெருவில் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது உறவினர் இறந்து விட்டதால் அதற்கான காரிய நிகழ்ச்சி நடந்தது. இந்த காரிய நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் கொண்டு சென்று கொட்டியுள்ளனர்.
இதனைப் பார்த்த கி.வீரலட்சுமியின் கணவர் கணேசன் எதற்காக என் வீட்டின் அருகே சாப்பிட்ட இலைகளை கொட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது வாய் தகராறு ஏற்பட்டு கணேசனை கட்டையால் தலையில் அடித்துள்ளனர்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 25 தையல்கள் போடப்பட்டது.
பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து செவ்வாபேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களான மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.