தருமபுரி : பாலக்கோடு அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வாகனம் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் பெட்டமுகிலாலம் மலை பகுதிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து பிக்கப் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த தீபா(35), தங்கம்மாள்(55) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 10க்கும் மேற்ப்பட்டவர்களை அருகே இருந்த பொது மக்கள் உதவியுடன் 108 ஆம்புலன் மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களின் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் படுகாயமடைந்தவர்களை முதல் உதவி அளிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிக்கப் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சரவணன் பிடித்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.