சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கமான நடைமுறையே தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து இலகு ரக வாகனங்கள், விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பால் மற்றும் மருத்துவ தேவைகள், உள்ளூர் பொதுமக்கள் பயணிக்க தடையில்லை என இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது. கனரக லாரிகள் வழக்கம்போல் மாலை 6.00 மணிக்கு மேல் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
கார்கள், பேருந்து, மினி வேன்கள் கட்டணம் செலுத்தி, சென்று வருகிறது. தங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வராததால், வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படும் எனவும், இரவு 9.00 மணிக்கு மேல் எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது எனவும், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும் எனவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்னரே திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.