கோவையில் அதிமுக ஆட்சியின் போது பல கோடி செலவில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது. 40 முதல் 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததால், பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
அதோடு, இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பைபாஸ் சாலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மீட்டெடுக்கும் விதமாக, அரசியல் சார்பற்ற, ‘வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு’ என்ற அமைப்பை அப்பகுதி மக்கள் உருவாக்கியுள்ளனர். வெள்ளலூர் பேருந்து கட்டுமான பணிகளை விரைந்து துவக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குப்பைகளை சேகரிப்பதில் கோவை மாநகராட்சி வார்டுகளை 5 மண்டலங்களாக பிரிக்க வேண்டும், ஒரு மண்டல குப்பைகளை மட்டும் வெள்ளலூர் குப்பை கிடங்களில் கொட்ட அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டுவதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சீர்கேடு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாக தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்கள், துடியலூர் மற்றும சரவணப்பட்டியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்தப் பகுதிகளிலேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.