கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல்&டி பை பாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழ 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 65 % பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.
இந்த சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் வெள்ளலூர் பேருந்து நிலைய மீட்புக்குழு மனு அளித்தது.
இந்த நிலையில், தங்கள் பகுதியில் பேருந்து நிலையம் அமைவதால், வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளாதார வளர்ச்சி பெறும் என்று நம்பியிருந்த அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், ஒன்னே கால் ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்காதது ஏன்..? என்றும், இந்த விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு ஆழ்ந்த யோசனை ஏன்..? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே நிதிச்சுமையில் திண்டாடி வருவதாக தமிழக அரசு அடிக்கடி கூறி வரும் நிலையில், சுமார் 80 கோடி செலவு செய்து வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சுமார் 40 கோடி செலவு செய்தால், பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படும் சூழலில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல், திட்டமிட்டபடி பேருந்து நிலையப் பணிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
எனவே, கோவை மாவட்ட மக்களின் விருப்பப்படி, வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி, மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.