கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 1000 டன் குப்பை சேகரமாகும். இவை அனைத்து வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்களில் கொட்டப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் மாசுபாடு அடைவதாகக் கூறி, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், குப்பைகளை அழிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அந்த நடவடிக்கையை கோவை மாநகராட்சி சுணக்கம் காட்டி வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த 16ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி, வெள்ளலூரில் சேகரமாகியிருக்கும் குப்பைகளை உடனே அகற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட அதிநவீன இயந்திரங்களின் விலையோ அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட தொகை குறித்தோ ஆய்வு செய்யப்படாதது ஏன்..? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு, அதிநவீனம் இல்லாத Trommel இயந்திரங்களை வைத்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் பணிகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகத்தின் இயக்குநரிடம் முறையான நிதியை பெற்று, குப்பைகள் அகற்றும் விவகாரத்தில் உரிய தீர்வை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த விவகாரத்தில், இடைக்கால நிவாரணமாக ரூ.80 லட்சம் அளிப்பதாக கூறிய நிலையில், தற்போது வரை எந்தத் தொகையும் செலுத்தவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, இந்த விவகாரத்தின் தன்மையை உணர்ந்து கோவை மாநகராட்சி செயல்பட வேண்டும் என்றும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி சீர்படுத்துவது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உத்தரவிடுவதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.