கோவை : கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் பிரச்சனை எழுந்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த மருதாச்சலம் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
தூணைதலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த கணேசன் போட்டியிடுகிறார். அதிமுகவிற்கு பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 4ஆம் தேதி வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் திமுகவினர், வாக்கு சீட்டை கிழித்தும், வாக்கு பெட்டியை தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்றம் சென்ற அதிமுக பேரூராட்சி உறுப்பினர்கள் நீதிமன்ற உத்திரவுபடி தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
சிறப்பு தேர்தல் அலுவலர்களாக கோவை தெற்கு வருவாய் கோட்டாச்சியர் இளங்கோவன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலராக கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் அதிமுகவின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் தேர்தலில் கலந்துகொள்வதை தடுக்க அவர்கள் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தியதுடன் அதிமுகவினரையும் திமுகவினர் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினர்.
இதனிடையே இன்றும் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு அருகே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் திமுக.,வினர் மீது தாக்குதல் நடத்தினர்
இதில் திமுக தொண்டர் செந்தில்குமார் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழலில், வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.