இளைஞர் ஒருவரை குடிபோதையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி செயின் பறித்த சம்பவம் வேலூர் அருகே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கண்டிப்பேடு அடுத்த ஒட்டந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (29). இவர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடையின் முன்பு ஐந்து பேர் மது அருந்தி கொண்டிருப்பதாக தகவல் வந்ததால், கோவிந்தன் அங்கு சென்று பார்த்தபோது, அந்த கும்பலுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுபோதையில் இருந்த அந்த ஐந்து இளைஞர்கள் கோவிந்தனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். குடிபோதையில் இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கோவிந்தனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் வீடு திரும்பி விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.