வேலூர் மாவட்டம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் துரைவர்மா (49)
அவருடைய மகள் மோகனபிரீத்தி (13). துரைவர்மா சின்ன அல்லாபுரம் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து உள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் எலக்ட்ரிக் பைக்கை வாங்கி உள்ளார்.
இரவு அதனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது எலக்ட்ரிக் பைக்கில் இருந்த பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு பைக் முழுவதுமாக எரியத் துவங்கியது. அருகில் நிற்க வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பெட்ரோல் இருசக்கர வாகனத்தில் தீ பற்றி வந்த வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது.
மேலும், தீ வீட்டில் பரவி உறங்கிக் கொண்டிருந்த துரைராஜ் மற்றும் மோகன பிரீத்தி ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இருவர் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.