Categories: தமிழகம்

பிரபல ரவுடி வசூர் ராஜா கைது.. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கை முறிந்த சோகம்.. வேலூரில் பரபரப்பு..!!

வேலூரில் பிரபல ரவுடி வசூர் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி புதுவசூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வசூர்ராஜா (வயது 36). வேலூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி, மதுரை அருகே சுங்கச்சாவடியில் சொகுசு காரில் வந்த ரவுடிக்கும்பல் ரூ.50 கட்டணம் செலுத்த மறுத்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் வசூர் ராஜாவும் ஒருவர்.

போலீசார் அவரை கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து, பெங்களூரு போலீசார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவரை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அவர் மீது வேலூர் வடக்கு, தெற்கு, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து அவரை கைது செய்ய காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், கோர்ட்டில் ஆஜராகாததால் இது தொடர்பாகவும் அவர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வசூர்ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்தபடியே சத்துவாச்சாரி பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு, ரூ.3 லட்சம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக வசூர்ராஜா மிரட்டினார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் பாஷா மற்றும் அவரது கடையில் வேலை பார்க்கும் சலீம் ஆகியோர் கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவரை காரில் வசூர்ராஜாவும், அவரின் கூட்டாளியான காட்பாடி கார்ணாம்பட்டை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பாஷாவையும், சலீமையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உன் கடைக்கு வருவேன். ரூ.5 லட்சத்தை தயார் செய்து வைத்துக் கொள் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்று கூறினார். மேலும், அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாஷா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் வசூர் ராஜாவை பிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். அவரின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர். அதன்படி, பெருமுகையில் நேற்று வசூர்ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரையும், அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர்.

அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர்ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர் . இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.