சூடா பூரி கேட்டு ஓட்டல் ஊழியரை குடிகார போதை ஆசாமி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நேதாஜிசவுக் பகுதியில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான ரேணுகா என்ற உணவகம் உள்ளது
இந்நிலையில் இன்று காலை நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் குடிபோதையில் தனியார் ஓட்டலில் காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியரிடம் பூரி ஆர்டர் செய்துள்ளார். மேலும், சூடாகவும், விரைவாகவும் பூரிகேட்டு ஓட்டல் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியர் தனசேகருக்கும், குடிபோதையில் வந்த சந்திரசேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும். போதை ஆசாமியை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பி நிலையில், மீண்டும் ஹோட்டலுக்கு வந்த சந்திரசேகர், கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலுடன் ஹோட்டல் ஊழியர் தனசேகர் தலைமீது அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீசார் தனசேகரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து,
குடிபோதையில் தகராறு செய்த போதை ஆசாமி சந்திரசேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.