வேலூர் அருகே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் தியாகராஜன் வயது (39). இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். குப்பத்தா மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் உடன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, தற்பொழுது ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தியாகராஜன் மற்றும் அவரது மனைவி ரேவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தற்பொழுது ரேவதி தியாகராஜரை பிரிந்து, அவரது அண்ணன் உடன் கண்ணமங்கலத்தில் வசித்து வந்துள்ளார்.
நேற்று காலை 7:00 மணி அளவில் காட்பாடி பிரம்மபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் தனியார் பல்கலைக் கழகத்திற்ககு செந்தமான விவசாய பண்ணை உள்ளது. அதில் ரேவதி வேலை செய்து வந்துள்ளார். தியாகராஜன் சென்னையில் இருந்து வந்து தனது மனைவி ரேவதியிடம் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தி, வாய் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கவே, மனம் நொந்த தியாகராஜன் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனையடுத்து, அவ் வழியாகச் சென்ற அப்பகுதி மக்கள் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அடிப்படையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் காவலர் குமார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.