வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் அதிகாலை லாரி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார்
கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியிலிருந்து சென்னைக்கு லாரியில் அரிசி லோடு ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (38) என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது, வி.கோட்டா மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்த லாரி, பத்திரப்பல்லி சோதனைச்சாவடி அருகே வந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்து பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் 50 அடி பள்ளத்தில் இருந்த ஓட்டுநர் வேல்முருகனின் உடலை மீட்டனர்.
பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டு, இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.